Monday, 9 September 2013

Commodity Trading Tips for the day (10/09/2013)

Previous call:

buy copper : 471.00
Stop loss: 462
Target : 473
Time (11.05 am)
Hold : Intraday

Please exit from the copper since the copper target has been achieved.

Present rate of the copper : 473
Profit Rs. 2000
Time (12.30 pm)

Commodity Trading Tips for the day (10/09/2013)

Buy copper : 471.00
Stop loss: 462
Target : 473
Time (11.05 am)
Hold : Intraday

Monday, 2 September 2013

Commodity Trading Tips for the day (03/09/2013)

Previous Call:

Buy Crudeoil : 7185
Stop loss: 7155
Target : 7210
Time (10.10 am)
Hold : Intraday

Please Exit from the Crude oil since the target has been achieved.


Present Rate for Crude oil : 7210



Profit for Curde oil : Rs. 2500

Time: 11:58 pm


Commodity Trading Tips for the day (03/09/2013)

Buy Crudeoil : 7185
Stop loss: 7155
Target : 7210
Time (10.10 am)
Hold : Intraday
இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும்.

பொருளாதாரத்தை காத்த கலாச்சாரம்

அன்பு நண்பர்களே தலைப்பை பார்த்தவுடனே ஒரு இனம் புரியாத குழப்பம் எல்லோருக்கும் ஏற்படும்.

நமது பொருளாதாரத்திறக்கும், கலாசாரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். நமது தற்போதைய மோசமான பொருளாதாரதம் மற்றும் மோசமான நிர்வாகம் இவை இரண்டும் அதிகப்படியான அளவில் இருந்தும் இந்தியா இண்ணும் சோமாலியா போன்ற ஆசிய நாடுகளைப் போல் திவால் ஆகவில்லையே, ஏன் ?

இந்தியாவை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் திவாலாகும் நிலையில் இருந்து காப்பற்றியது எது?

நிதிப்பற்றாக்குறையை  சமாளிக்க நிதி எங்கிருந்து வந்தது?

1, ரிசர்வ் வங்கிக்கும், வர்த்தக வங்கிக்கும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மற்றும் 
2. பாரம்பரியமாக இந்திய குடும்பங்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் இட்டு வைப்பதால் இந்தியாவுக்குள் அரசு கடன் பெற முடிந்தது. 

கடந்த ஓராண்டில் இந்தியர்கள்  வங்கிகளில் சேமிக்கும் தொகை சுமார் ரூ.10 லட்சம் கோடியாகும். இதுவே உள்நாட்டு பொருளாதாரத்தல் இருந்து இந்தியப் 
பொருளாதாரத்தை காத்தது. 

ஆனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்படி சமாளிக்கப்பட்டது?

இந்த விசயத்தில் இது வரை  சொல்லப்படாத  உண்மை இதோ?
குடும்ப செலவுகளுக்காக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் தொகையும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உள்ளூரில் எடுக்கப்படும் தொகையுமே சர்வதேச அளவில் திவாலாகும் நிலையில் இருந்து  காத்து வருகிறது என்பதுதான் இந்த அதிர்ச்சி கலந்த உண்மையாகும். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அன்னியச் செலாவணி கையிருப்புக்கு இந்திய குடும்பங்களின் பங்களிப்பு 335 பில்லியன் டாலர் ஆகும். இது கிட்டத்தட்ட் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு சமமானதாகும். 

இந்த பணத்துக்கு  வட்டியும் கிடையாது. இந்தியப் பொருளாதாரத்துக்கு வாழ்வாதாரமாக விழங்கும் இந்தப் பணம், பொருளாதார கோட்பாடுகளாலோ அல்லது அரசின் கொள்கைகையினாலோ கிடைத்ததல்ல. பாரம்பரியம், கலாச்சாரம் மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு கிடைத்த பரிசு இது.

நவீன கால தனி மனிதத்துவத்துக்கு எதிராக போராடிவரும் ஒருங்கினைங்ந்த இந்திய குடும்பங்கள் இல்லாது போயிருந்தால் இந்த தொகை கிடைத்திருக்காது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் உற்றார், உறவினர்களை பாதுகாக்க இந்த தொகையை அனுப்பாமல் இருந்திருந்தால், இப்போது இந்திய பொருளாதாரத்திற்கு வாழ்வாதாரமாக உள்ள 335 பில்லியன் டாலர் வராமல் போயிருக்கும். அது மட்டுமல்ல, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசையே சேர்ந்த்திருக்கும்.

பொருளாதாரத்திற்கு கலாச்சார ரீதியாக பாதுப்பு அளிக்கும் இந்த நடைமுறைக்கு இந்திய அரசு நிர்வாகம் ஏப்போதாவது கவனித்திருக்கிறதா.?

உறவுமுறை சார்ந்த இந்திய சமூகம், உற்றார், உறவினர்களைப் பாதுகாப்பதை கலாச்சார ரீதியாக கட்டாயமாக்கி இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளைப் போல் ஒப்பந்த முறையில் வாழும் சமூகங்களில் இது சாத்தியமில்லை.

எந்த ஒரு அரசும் இவர்களைப் பற்றி சொன்னதும் இல்லை?

ஆனால் அந்திய முதலீடுகளை மட்டும் தம்பட்டம் அடித்து வருகிறது. ஏனென்றால் இவற்றில் தான் இவர்களுக்கு லாபம் அதிகம்.

இப்போது படிப்படியாக இந்த கலாச்சாரமும் சீரழிந்தது வருகிறது, என்பது மிகவும் வருத்தத்திற்குரியது...

முடிந்த வரை உறவுகளையும், கலாச்சாரத்தையும் பேணிக்காப்போம்.
பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் இதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்.

தினமணியில்   வெளியான குருமூர்த்தி அவர்களின் கட்டுரையின் அடிப்படையினிலே மேலே கூறியவற்றை பதிவு செய்திருக்கிறேன். ஆகவே அவர்களுக்கு எனது நன்றியை சமர்பிக்கிறேன்.

Tuesday, 27 August 2013

Commodity Trading Tips for the day (29/08/2013)

Buy copper at : 508.90
Stop loss : 490.50
Target : 520
Hold : Intraday
Time: 10.15 

Buy Aluminium at : 128.30
Stop loss : 121
Target : 132
Hold: Intraday
Time: 10.15 

இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு உங்களயே சாரும். 

ரூபாயின் வீழ்ச்சி

அன்பு நண்பர்களே,

தலைப்பை எழுத நினைத்தவுடனே  எண்ணத்த புதுசா  சொல்ல  என்ற நினைப்பிலே சில கருத்துகளை பதிவு செய்ய விரும்புகிறேன். 


முதலில் நமது மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறிய வீழ்ச்சிக்கான காரணங்களை பாப்போம்.



இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைய உள்நாட்டு இறக்குமதியாளர்களே காரணம்: 

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்கு மதியாளர்களே காரணம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெளிமார்க்கெட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதற்கு உள்நாட்டு இறக்கு மதியாளர்களே காரணம். இதனால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றும் முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்து திட்டங்களையும் திட்டமிட்டபடி தொடர நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி துறையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் துரித கதியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 மின் திட்டங்களை தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டுக்கான ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார். 

இந்திய ரூபாயின் மதிப்பை மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு வர பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று சிதம்பரம் கூறினார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால் தான் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

மேலே பர்ர்த்த இரண்டு கருத்துகளை வைத்து பார்க்கும் போது , இவர்கள் இதுவரை நடவடிக்கை எடுத்து விட்டர்களா,  நடவடிக்கை எடுக்க போகிறார்களா, நடவடிக்கை எடுப்பார்களா அல்லது இந்த நிலைமைதான் நீடிக்குமா என்று மறைமுகமாக கூற விளைகிறார்களா என்ற ஐயம் எல்லோருக்கும் வருகிறது

அடுத்ததாக , அவர் கூறியது 

பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்டிருந்த ரூ.1,82,997 கோடி மதிப்பிலான 36 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக சிதம்பரம் கூறியுள்ளார். இதன் மூலம் திட்டங்களை செயல்படுத்த வங்கிகளிடமிருந்து மூலதனம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். முதலீடுகள் கிடைக்க தொடங்கிய பின்னர் பொருளாதார நிலையில் மாறுதல் ஏற்படும் என்று சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்தய ரிசர்வ் வங்கியின் மீட்பு நடவடிக்கைகள்:

இந்திய ரூபாயின் மதிப்பு தினம்தோறும் சரிவடைந்து வருவதை அடுத்து ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்திடம் 200 டன் தங்கத்தை அடமானம் வைக்கப்போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏறுமுகமாக உள்ளதோடு இறக்குமதி நிறுவனங்களுக்காக அமெரிக்க டாலரின் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளதாகும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு நீடிப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அடுத்ததாக  திட்டக்குழு துணை தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா அவர்களின் கருத்துக்கள்:

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதை தடுக்க  அத்யாவசிய செலவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும், அரசு செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், உணவு பாதுகாப்பு மசோதாவால் அரசு பெரும் நிதிச்சுமையை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளநிலையில், இறக்குமதியாகும் பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், உள்நாட்டு எண்ணெய் வகைகள் விலை சரிந்து வருகின்றன.  இந்தியாவுக்கு இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல், தென் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன் போன்ற நாடுகளில் இருந்து சன் பிளவர் ஆயில் இறக்குமதி ஆகிறது. தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதால், பாமாயில், சன்பிளவர் ஆயில் விலை உயர்ந்து வருகிறது. இதன் விலைகள் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது அதேநேரம் உள்நாட்டு எண்ணெய் வகைகள் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் யாவரிடமும்  பிரச்சனையை  தீர்பதற்கான ஒருமித்த கருத்து  நிலவுவதாக தெரியவில்லை.   

 ஆனால் எங்கள்  குடுமியில் கைவைத்து விடார்தீர்கள் என்று கெஞ்ச  வேண்டும் என்று தான் தோன்றுகிறது.